தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2  முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.