உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அப்போது அவர் இது போன்ற அறிக்கைகள் ஒரு அவதூறு பிரச்சாரம். கும்பமேளாவை அவமதிக்கும் பிரச்சாரம். உண்மையிலில் பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றது தான். ஏன் குடிக்கவும் உகந்தது தான் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக பிரயாக்ராஜில் கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனித கழிவுகள் மூலம் பரவும் ஃபீக்கல் கோலிஃபார்ம் நுண்ணுயிரிகள் அதிகரித்திருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திட்டம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.