நாட்டில் சமீப நாட்களாக திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ராஜு ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.

ஆகவே திடீர் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று மக்களவையில் உறுப்பினர் ராஜு ரஞ்சன் சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.