
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர்களுக்குரிய ரூபாய்.200 மானியத்தை மத்திய அரசானது வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
இந்த மானியத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்குரிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 9.6 கோடி குடும்பங்கள் பயன் அடைவார்கள். 2022-23 நிதி ஆண்டில் மொத்த செலவு ரூ.6,100 கோடியாகவும், 2023-24-ல் ரூ.7,680 கோடியாகவும் இருக்கும் என தாக்கூர் தெரிவித்தார். மானியம் தகுதியுள்ள பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.