
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் உயிரிழந்த இளைஞர் என்ன பயங்கரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை என்ற பெயரில் தாக்கியது ஏன்? என்று தெரியவில்லை என்று கூறிய நீதிபதிகள், சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.