ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இதனை ஈடு செய்யும் பொருட்டு மே 10-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.