செல்போன் வருவதற்கு முன்னதாக மக்கள் தொலைதொடர்பு சாதனமாக கடிதங்களை தான் பயன்படுத்தி வந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட செல்போன் மூலமாக குறுஞ்செய்தி மூலமாகவோ நலம் விசாரித்து வருகிறோம். ஆனால் செல்போன் பயன்பாடு வருவதற்கு முன்னதாக கடிதங்கள் தான் மக்களுக்கு மகத்தான  சேவையை புரிந்து வந்தது. அந்த வகையில் அஞ்சல் முறை பழமையான தகவல் தொடர்பு முறை என்று அழைக்கப்படுகிறது. ஒவொரு வருடமும் அக்டோபர்  ஒன்பதாம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினம் தான் சர்வதேச அஞ்சல் தினமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்து உலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அஞ்சல் தினத்தில் வரலாறு 1840 ஆம் வருடத்திற்கு முந்தையது. இங்கிலாந்தில் சார் ரோலன்ஹில் ஒரு அமைப்பை கொண்டு வந்தார்.

அதன்மூலம் கடிதங்களில் தபால்களை முன்கூட்டியே செலுத்த வேண்டும். உள்நாட்டு சேவையில் ஒரு குறிப்பிட்ட அளவு எடை கொண்ட அனைத்து கடிதங்களும் ஒரே விகிதத்தில் வசூலிக்கப்படும் என்று கூறினார். மேலும் இவர் உலகின் முதல் தபால் தலையையும் அறிமுகப்படுத்தினார். 1863ஆம் வருடம் யுனைடெட் ஸ்டேட் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெனரல் மாண்ட்கோமெரி பிளேர்  என்பவர் பாரீசில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். அதில் 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள்.

அவர்களோடு பரஸ்பர ஒப்பந்தங்களுக்கான பல பொதுவான கொள்கைகளை வகுக்க ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் குறைபாடு என்னவென்றால் சர்வதேச அஞ்சல் ஒப்பந்தத்திற்கு எதுவும் நிறுவப்படவில்லை. அதன் பிறகு அதே வருடம் அக்டோபர் ஒன்பதாம் தேதி பொது அஞ்சல் ஒன்றியத்தை நிறுவியதன் மூலம் உலக அஞ்சல் தினம் தொடங்கப்பட்டது. 1878 ஆம் வருடம் அதன் பெயர் யுனிவர்சல் தபால் ஒன்றியம் என்று மாற்றப்பட்டது.