டெல்லியில், போதையில் இருந்த ஒருப் பெண் ராபிடோ (Rapido) பைக்கிலிருந்துச் சறுக்கி விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண் , சமநிலையை இழந்து கிட்டத்தட்ட மயக்கமடைந்த நிலையில் இருக்க, பைக் ஓட்டுநர் கஷ்டப்பட்டுச் சமநிலைப்படுத்தி அவரைக் கீழே விழாமல் தடுக்க முயற்சிக்கும் காட்சி அதில்ப் பதிவாகியுள்ளது.

அந்தப் பெண் பைக்கிலிருந்து முற்றிலும் சறுக்கி விழுந்தபோது, ராபிடோ ஓட்டுநர் அவசரம் காட்டாமல், அவளைப் பத்திரமாகப் பிடித்து மெதுவாகத் தரையிறக்கிப் பெரிய விபத்து ஏற்படுவதைத் தவிர்த்தார்.

இந்தச் சமயத்தில், வீடியோவைப் பதிவு செய்த ஒரு வழிப்போக்கர், “அவளை விட்டுவிடு, விழட்டும்!” (Chhod Usko… Gira De) என்று கூறியது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆனால், பொறுமையுடனும் விபத்தைத் தவிர்த்த ஓட்டுநரின் துணிச்சலானச் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். இதுபோன்ற அபாயகரமானச் சூழ்நிலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சவாரி நிறுவனங்கள் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் என்றக் கோரிக்கையும் வலுத்துள்ளது.