பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான பாபர் அசாம், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், அவரது தடுமாற்றமான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Babar Azam was always a Fraud , Still wondering what Sydney sixer saw in him, Tbh he literally bottled four Major Tournaments for Pakistan & unlimited Bilateral Matches with his shit batting, this is his first and last BBL Season.pic.twitter.com/f3pSxMW5ad
— SheR•ALI (@Sher__Ali) December 26, 2025
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தனது ஃபார்மை மீட்கப் போராடி வரும் அவர், இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முறையே 2 மற்றும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், சிட்னி தண்டர் அணிக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய பாபர், 42 பந்துகளில் 58 ரன்கள் குவித்து தனது முதல் பிக் பேஷ் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு, தனது அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஆனால், இந்த ஒரு இன்னிங்ஸைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் மீண்டும் 2 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இதுவரை விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 71 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஷாட் செலக்ஷனில் அவர் செய்யும் தவறுகள் அவரது விக்கெட்டை எளிதில் பறிக்க வழிவகுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிட்னி சிக்சர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், பாபர் அசாம் வரும் போட்டிகளில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர்களை எடுக்க வேண்டியது அவசியமாகும். அவரது பேட்டிங் யுக்திகள் மற்றும் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அவர் மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்குத் திரும்புவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
