பெங்களூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின்  மகன் பிரசாந்த் மாதலை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து அவரது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய்.1.22 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க எம்எல்ஏ மகன் பிரசாந்த் மாதல் தனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் தான் மாதல் விருபக்ஷப்பா.