தெலுங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகரில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் இட்லி கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் வழக்கம் போல கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு குறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அப்பெண் அந்த நபரின் சட்டையை பிடித்து நடுரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

இனிமேல் என் முன் தென்பட்டால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலை தளங்களை வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை தேடி பிடித்து புகார் எழுது வாங்கியதோடு அந்த நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் துணைச்சல் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.