திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் இருக்கும் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற செந்தில் கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.