மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து 13 பேர் இறந்தனர்.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 24 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 -5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. வானிலையின் தாக்கம் மேம்பட்ட பிறகே இந்த முடிவில் இருந்து மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.