கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல்-நடிகை அதியா ஷெட்டியின் திருமணமானது மகாராஷ்டிரா காந்தாலாவிலுள்ள சுனில் ஷெட்டியின் பார்ம் ஹவுஸில் நடந்தது. இதில் அதியா ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இதன் காரணமாக திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் புதுமண தம்பதியினருக்கு அன்பளிப்புகளை கோடி ரூபாய் மதிப்பில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மென்டை சுனில் ஷெட்டி தன் அன்பு மகளுக்கு வழங்கி உள்ளார்.

அதேபோல் நடிகர் சல்மான் கான் அதியா ஷெட்டிக்கு ரூ.1.64 கோடி மதிப்புள்ள எக்ஸோடிக் (Exotic) காரை பரிசளித்து இருக்கிறார். சுனில் ஷெட்டி உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராப், அதியா ஷெட்டிக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக் கடிகாரத்தை பரிசாக அளித்து உள்ளார். இதையடுத்து நடிகர் அர்ஜூன் கபூர், 1.5 கோடி ரூபாய் மதிப்புமிக்க வைர கைச்செயினை (Bracelet) அதியாவுக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

அதன்பின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி, 2.17 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்வாங்கி (Swanky) காரை கே.எல்.ராகுலுக்கு பரிசளித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸகி நிஞ்சா பைக்கை ராகுலுக்கு பரிசாக வழங்கியுள்ளார். ராகுல்-அதியா ஜோடி தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடப்பு ஆண்டின் IPL போட்டி நிறைவு பெற்ற பின் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.