திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது வடபருத்தியூரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே வெடி வைத்த தோட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..