தமிழ் சினிமாவில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மனோபாலா சமீபத்தில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா அதன்பின் ஒரு நடிகராக மாறினார். இந்நிலையில் நடிகை சுகாசினி மனோபாலா பற்றிய ஒரு விஷயத்தை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது நடிகர் கமல்ஹாசனும் மனோபாலாவும் பேசிக்கொள்ள மாட்டார்களாம். குறிப்பாக கமல்ஹாசன் மனோபாலாவை அப்படியே ஒரு கட்டத்தில் ஒதுக்கி விட்டாராம். மனோபாலா அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் கமல் வரவே மாட்டாராம்.

மனோபாலா இருந்தால் அந்தப் பக்கம் கூட திரும்பாமல் கமல்ஹாசன் போய்விடுவாராம். இதுகுறித்து நடிகை சுஹாசினியிடம் மனோபாலா கூறி கமல்ஹாசனை என்னிடம் பேச சொல்லுங்கள் என்று கதறி அழுதுள்ளார். உங்களுடைய சித்தப்பா எல்லோரிடமும் பேசுகிறார். ஆனால் என்னிடம் மட்டும் பேசாமல் இருக்கிறார் என்றும் மனோபாலா கூறியுள்ளார். நடிகர் மனோபாலா மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவார் என்பதால் அதில் தான் கமலுக்கு மனோபாலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மனோபாலாவின் இறுதிக்காலத்தில் கமல்ஹாசன் அவருடன் நன்றாக பேசி பழகினார் என்று சுகாசினி கூறியுள்ளார்.