விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் விசாரணை அதிகாரி அமுதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்க, விசாரணை அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்தது.

மேலும் ஒரு மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை அளிக்கவும் விசாரணை அதிகாரிக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து அமுதா ஐஏஎஸ் நாளை முதல் விசாரணையை தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.