நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வெளியான திகிலூட்டும் வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு விஷப்பாம்பு ஒன்று படுக்கை அறையில் ஊர்ந்து செல்வதும், பிறகு தலையணை உறைக்குள் ஒளிந்து கொள்வதும் பதிவாகியுள்ளது.
#WATCH | Viral Video Shows Poisonous Snake Under Pillow In Nagpur#Maharashtra #nagpur #snake #maharashtranews pic.twitter.com/cMVHDdtjTM
— Free Press Journal (@fpjindia) May 30, 2025
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி, வீடுகளுக்குள்ளும் ஆபத்து பதுங்கியிருக்கிறது என்பதை உணர்த்தி, இணையவாசிகள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோவில், சுமார் ஓரடி நீளமுள்ள பாம்பு தலையணைக்குள் இருந்து ஊர்ந்து சென்று, அருகில் உள்ள மற்றொரு தலையணைக்கு அடியில், மெத்தைக்கும் படுக்கைக்கும் இடையில் ஒளிந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது.
வீட்டிற்குள் விஷப்பாம்பு புகுந்ததைக் கண்ட மக்கள் உடனடியாகப் பாம்பு பிடிப்பவருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பாம்பு பிடிப்பவர், தற்காப்பு மனநிலையில் இருந்த அந்தப் பாம்பை மிகவும் விரைவாகவும், அமைதியாகவும் அணுகிப் பிடித்துள்ளார். பிறகு, அந்தப் பாம்பைப் பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் கொள்கலனுக்குள் வைத்து மூடி, அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
