திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரதன்யா(27) மற்றும் கவின்குமார் (28) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்களை ஆனது. இந்நிலையில் புதுமணப் பெண் பிரதன்யாவுக்கு அவரது கணவன், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர்.

இதனால் மணமுடைந்த பெண் தன்னால் இனி வாழ முடியாது. அதேபோன்று மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை என்றும், ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் தன் சாவிற்கு தனது கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 தான் காரணம் என்று தனது தந்தையின் செல்போனுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

இதை அடுத்து அவர் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை அருந்தி  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆடியோ விவகாரம் நேற்று வெளிவந்ததை அடுத்து உறவினர்கள் இன்று சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் புகார் அளித்தனர்.

அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.