சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி காவல்துறையின் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகே உள்ள காலி மனையில் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தாய் பாரதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரட்டைக் குழந்தையில் ஒரு குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மன உளைச்சலில் இருந்த தாய் அந்த குழந்தையை 2-வது மாடியில் இருந்து கட்டை பையில் வைத்து வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.