புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமையாகும். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பொறுத்தவர் பூமி ஆழ்வார்கள். நாங்கள் பதற்றம் இன்றி தெளிவாக உள்ளோம். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. வரும் ஜனவரிக்குள் எல்லாம் முடிவெடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்று தான். வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும் என்று கூறினார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.