
உயிரை பற்றி கூட கவலைப்படாமல் ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், மருத்துவமனையில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் செய்யும் நேரத்தில், அந்த முதியவர் சுருள் புகையிலையை எடுத்து கையில் வைத்து பொறுமையாக தேய்த்து கொண்டிருப்பது தெரிகிறது.
எம்ஆர்ஐ இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோதும், அவர் அதில் கவலைப்படாமல் தன் புகையிலை போடும் பழக்கத்தை தொடர்ந்ததைக் காணலாம். சாதாரணமாக, எம்ஆர்ஐ செய்யப்படும் நேரத்தில் எந்தவித அசைவும் கூட அனுமதிக்கப்படாது. ஆனால் அந்த வயதான நபர், மருத்துவமனையின் ஒழுங்கை முற்றிலும் மீறி, இயந்திரத்தில் உள்ளபடியே புகையிலை போட தொடங்கினார்.
जल्दी-जल्दी खैनी खा लेता हूं फिर चैन से MRI मशीन का मजा लूंगा – चैनी खैनी चैन से मजा ले। pic.twitter.com/WS77nU4XBP
— Reetesh Pal (@PalsSkit) May 10, 2025
“மரணம் வந்தாலும் பரவாயில்லை, ஆனா இத விட்டுட முடியாது” என்ற போக்கில் அவர் செயல்பட்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு மருத்துவமனை அல்ல, புகையிலை தொழிற்சாலையைப்போல இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டலுடன் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், இது மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. இதுகுறித்து சிலர் , “இதை இந்தியாவில் மட்டுமே காண முடியும்” என விமர்சித்துள்ளனர். மருத்துவ சிகிச்சை என்பது ஒரு நம்முடைய வாழ்வை பாதுகாக்கும் முயற்சி என்பதையும், பொதுநல நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
மருத்துவமனையில் கட்டுப்பாடுகள் இருப்பினும், தனிப்பட்ட பழக்கங்கள் அதனை எப்படி மீறப்படுகின்றன என்பதை அந்த வீடியோ காட்டியுள்ளது.