குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் எழுந்தது. அந்த கோரிக்கைகள் குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது. 2022ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் மூலம் 2020-21, 21-22, 22-23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் 10,139 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 3380 காளி இடங்கள் நிரப்பப்பட்டன.

2024ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் மூலம் 2023-2024, 2024-25 ஆகிய 2 நிதியாண்டுகளில் 1932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளன. அதாவது ஒரு நிதி ஆண்டுக்கு 446 காலிபடங்கள் பணியிடங்கள் உள்ளன. அதேபோன்று 2024 ஆம் ஆண்டு ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 காலிப்பணியிடங்கள் 2172 காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட உள்ளன. எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் கூறியிருந்தார்.