
பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே கேரளாவை பின்தங்கிய மாநிலமாக அறிவியுங்கள். கேரளாவில் சாலைகள் பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. கல்வி மேம்பாடு அடையாமல் உள்ளது.
கேரளாவில் கல்வியிலும், சமூகத்திலும், உள்கட்ட அமைப்பு ரீதியாகவும் பின்தங்கி உள்ளதாக அறிவித்தால் நிதி ஆணையம் அதிக நிதியை கேரள அரசுக்கு ஒதுக்கி தர அறிக்கை அளிக்கும் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் 2025- 26 காண பட்ஜெட்டில் கேரளாவிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என முதல்வர் பினராய் விஜயன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறிய கருத்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.