
அரியானா மாநிலத்தில் உள்ள இண்டிகோ விமான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தான் சாதி ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, 35 வயதான அந்த பயிற்சி விமானி தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் எனவும், தன்னை இண்டிகோவின் 3 மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
“தன்னை விமானம் போட்ட தகுதியற்றவன், போய் செருப்பு தைக்கும் வேலை செய்” என அதிகாரிகள் இழிவாக பேசியதாக அந்த புகாரில் கூறியுள்ளார். மேலும் சாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும், தான் பணிபுரிந்த போது தனக்கு மட்டும் சம்பளம் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தபஸ் தே. மணீஷ் சாஹ்னி, கேப்டன் ராகுல் பாட்டில் ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவன தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.