
அலகாபாத்தில் ஒருவரின் தந்தை BSNL டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உயிரிழந்த பிறகு, அவரது வேலையை பெற மகளுக்கு தகுதி இல்லை என்று கூறுகின்றனர். நான் விதவை என்பதால், அந்த வேலையை கருணையான அடிப்படையில் எனக்கு வழங்க வேண்டும் என்று அந்தப் பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதன்படி அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் விதவையான பிறகு, தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வாழ்ந்து வருகிறேன்.
அந்த வேலையை தனக்கு நியமித்தால் குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரை கவனித்துக் கொள்ள முடியும் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது, ஒரு பெண் திருமணமான பிறகும், விதவையான பிறகும் மகள் என்ற பகுதியில் உள்ளார். குறிப்பாக தந்தை இறந்ததற்கு முன்பே, மகள் விதவையானதால் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உள்ளது என்று கூறினார். அதனால் கருணையின் அடிப்படையில் அவரது தந்தையின் பதவியை அவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.