ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள முக்கியமான அணுசக்தி தளங்கள் மற்றும் முக்கியமான இலக்குகளை அடையாளம் கண்டுள்ளோம்.

இதற்கான உளவுத்துறை ஆதாரங்கள், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஈரானின் நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ தாக்குதல்கள் நடத்தினால், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.

அதற்காக ஈரானின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறை தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் சுதீப் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக அனைத்து நாடுகளும் நம்பினாலும், அதனை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது முக்கியமானது.