தமிழ்நாட்டில் காஞ்சி மாநகரம் பட்டுக்கு பெயர் போன மாவட்டமாகும். இங்கு பிரபலமான வரலட்சுமி பட்டு சேலை விற்பனையகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாய் சில்க்ஸ் காலா மந்திர் குழுமத்தின் விற்பனையகம் ஆகும். இந்த குழுமத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது.

இவர்களின் அனைத்து கடைகளிலும் தற்போது வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரலட்சுமி பட்டு சேலை விற்பனையகத்திலும்‌ வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கடையின் உரிமையாளர்‌ SKP B. கோபிநாத் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.