அசாமில் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அதில் சமகுரி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு காங்கிரசின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்றது. இதனால் இந்த வெற்றியை ஆளும் பாஜக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் கொண்டாடி மகிழ்ந்தது. இந்நிலையில் அசாமின் பாஜக அரசின் அசாம் கண பரிஷத் கட்சி கூட்டணியில் உள்ளது. இந்த கட்சி தேசிய ஜனநாயக கட்சி கூட்டணிலும் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சியின் தொண்டராக தேப்நாத் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏஜிபி பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனால் தேப்நாத் மிகவும் வேதனைப்பட்டு, ஒரு சவாலையும் எடுத்தார். அதன்படி இனி ஏஜிபி இந்த தொகுதியில் வெற்றி பெறும் வரை நான் காலணிகளை அணிய மாட்டேன் என்று சவால் விடுத்தார். அதன்படியே 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கட்சி மற்றும் எந்த வேலைக்கு வெளியே சென்றாலும் செருப்பு அணியாமல் தான் சென்றுள்ளார். இதனை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இருப்பினும் அவர் கவலைப்படவில்லை. தற்போது கூட்டணியில் உள்ள அந்த கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து தேப்நாத் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மூத்த ஏஜிபி தலைவர் கேசப் மஹந்தா கடந்த ஜனவரி 22ம் தேதி நேப்நாத் வீட்டிற்கு சென்றார். அப்போது கேசப் அவருக்கு 2 ஜோடிகள் செருப்புகளை வழங்கினார். இதனால் அவர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து கேப்நாத்தின் 24 ஆண்டு கால சவால் முடிவுக்கு வந்தது.