தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் இவர் பிரஜ்ஜா ராஜியம் என்ற கட்சியை தொடங்கினார். சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய இவர் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. இதனால் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து எம்பி ஆக இருந்தார். அதன் பிறகு அவர் அரசியலில் தலை காட்டாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று பிரம்மானந்தம் என்ற திரைப்படம் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சிரஞ்சீவி கூறியதாவது, ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அதன் வெளியீட்டு விழாவும் முக்கியம். அப்போதுதான் அந்த திரைப்படம் ரசிகர்களை விரைவாக சென்றடையும். நான் அரசியலுக்கு திரும்பவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தனது வாழ்நாள் முழுவதையும் நான் சினிமாவில் அர்ப்பணிக்க போகிறேன். மீண்டும் நான் அரசியலுக்கு வரமாட்டேன். சினிமா சேவைகளுக்காக மட்டுமே அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பேன் என்று கூறினார்.