தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், நீல் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகும் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்தியன்‌ 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் என்னுடைய மகனுக்கு 8 வயது ஆகும் வரை நான் அவனுக்கு டிவி மற்றும் செல்போன் போன்ற விஷயங்களை காண்பிக்க மாட்டேன். அவனுக்கு 8 வயது ஆன பிறகு தான் நான் படங்கள் பார்க்க அனுமதிப்பேன். என்னுடைய மகனுக்கு நான் முதலில் துப்பாக்கி படத்தை தான் காண்பிப்பேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த துப்பாக்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு துப்பாக்கி படம் காஜல் அகர்வாலின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.