சினிமாவில் பட்ட கஷ்டங்கள் குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் பேட்டி அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் சினிமாவில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி அளித்து இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, சினிமா துறையில் எனக்கு எந்த பின்னணியும் கிடையாது. மும்பை பாந்த்ராவில் இருக்கும் ஒரு ஓட்டலில் உட்கார்ந்து கொண்டே எந்தெந்த ஆபீசுக்கு செல்ல வேண்டும்? எத்தனை நடிகை தேர்வில் பங்கேற்க வேண்டும்? என திட்டம் போடுவேன். ஏதாவது நடிகை தேர்வு நடைபெற்றால் அங்கு நான் செல்வேன்.

மேலும் பையில் சில உடைகள் எடுத்துக்கொண்டு காரிலேயே மாற்றிக் கொள்வேன். ஆனால் வாய்ப்புகள் வந்த மாதிரி இருக்கும். ஆனால் அது கைநழுவி விடும். ஒவ்வொரு முறையும் என்னை படத்துக்கு ஒப்பந்தம் செய்து சில நாட்களுக்குப் பிறகு வேறு கதாநாயகியை போட்டுவிடுவார்கள்.

இதையெல்லாம் நான் போராட்டம் என எண்ண மாட்டேன். காரணம் கஷ்டப்படாமல் சுலபமாக எதுவும் கிடைத்த விட வேண்டும் என நினைப்பவள் நான் கிடையாது. இதனால் போராட்டம் என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது. அந்த நாட்களில் தன்னம்பிக்கையோடு அடி எடுத்து வைத்தால் தான் இன்று நான் இந்த நிலைமைக்கு வர முடிந்தது என தெரிவிக்கின்றார்.