
தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் போஷான் நகரில் பிரபல நிறுவனமான 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதியதாக கழிவறை பயன்பாட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது பிப்ரவரி 11 முதல் அமலுக்கு வந்த இந்த விதியின் படி, ஊழியர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கழிவறையை பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு முறையும் 2 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காலையில் 8:00 மணிக்கு முன் பயன்படுத்தலாம். அதன் பின் 10.30-10.40, மதியம் 12-1.30,3.30-3.40, மாலை 5.30-6.00. கூடுதல் பணி செய்யும் ஊழியர்கள் இரவு 9 மணிக்கு பிறகு மட்டுமே கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனைத் தவிர்த்து மற்ற நேரங்களில் கழிவறை செல்ல அனுமதி பெற வேண்டும். அது அவசர தேவையாக இருந்தால் மட்டும் 2 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இதனை கண்காணிக்க நிறுவனத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் விதிகளை மீறும் பணியாளர்களுக்கு 100 யுவான். அதாவது, 1200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறையை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இது சீன விதிமுறையை மீறுவது என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பணியாளர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.