தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த புகார்களை புறக்கணிக்கிறது. இந்நிலையில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு வேகமாக பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதனை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.