தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். ஆனால் மலையாள சினிமாவில் சமந்தா இதுவரை ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. இந்நிலையில் சமந்தா தற்போது நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் காரணமாக தற்போது கேரளாவிலும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, எனக்கு மலையாள சினிமாவை ரொம்ப பிடிக்கும். மற்ற மொழிகளை விட மலையாள சினிமாவில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தனித்துவமாக நடிப்பார்கள். ஒருவேளை எனக்கு நான் நடிப்பதில் திருப்தி இல்லை என்றால் உடனடியாக மலையாள சினிமாவை பார்த்து வித்தியாசமாக நடிக்க கற்றுக்கொள்வேன். எனக்கு மலையாளத்தில் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக நான் மலையாளம் கற்றுக் கொள்வேன். என்னுடைய அம்மா ஒரு மலையாளிதான். ஆனால் எனக்கு அவர் இதுவரை மலையாளம் பேச கற்றுக் கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவர் மீது இருக்கத்தான் செய்கிறது என்று சமந்தா கூறினார்