இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியின் கலாச்சார மைய நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட், பாலிவுட், தென்னிந்திய சினிமா நடிகர் நடிகைகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் ஷாருக்கான் பதான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். இதே பாடலுக்கு ஷாருக்கானுடன் சேர்ந்து ரன்வீர் சிங் மற்றும் வருண் தவான் ஆகியோரும் நடனம் ஆடினர். இதேபோன்று ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆலியா பட் இணைந்து தங்கள் குழுவுடன் நடனம் ஆடினர். நடிகை ராஷ்மிகா சேலையிலும், ஆலியா பட்  குட்டை நிற கவுனிலும் இருந்தார். இருவரும் மேடையில் நடனமாடிய போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.