தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவர் தமிழில் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் மற்றும் கலகலப்பு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தற்போது ரிலேஷன்ஷிப் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ஒரு ரிலேஷன்ஷிப்பில் மரியாதை ரொம்ப முக்கியம். அதன் பிறகு தான் அன்பு மற்றும் காதல் எல்லாமே. அப்படி ஒரு மரியாதை இல்லை என்றால் அந்த உறவே எனக்கு தேவையில்லை.

கெரியரா அல்லது உறவா என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால் எனக்கு இரண்டுமே முக்கியம்தான். திருமணத்திற்கு பிறகு ஆண்கள் வேலைக்கு செல்வது போன்று பெண்களாலும் செல்ல முடியும். மேலும் சில நடிகைகள் திருமணம் ஆகி குழந்தைகளை பெற்ற பிறகும் படங்களில் நடித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.