இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் வைரலான ஒரு நபர் தற்போது அன்றாட வாழ்க்கையில் உருளைக்கிழங்கை உரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.

அதாவது மிதிலேஷ் குமார் மஞ்சி என்பவர் தன்னை ஒரு போலி ஐபிஎஸ் அதிகாரியாக அடையாளப்படுத்தி பிரபலமானவர் ஆவார். இவர் தற்காலிக புகழுக்காக போலி ஐபிஎஸ் சீருடை, துப்பாக்கி மற்றும் வங்கி காசோலை ஆகியவற்றை மனோஜ் சிங் என்பவரிடமிருந்து 2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by India Today (@indiatoday)

அதன்பின் பல இடங்களில் சுற்றித்திரிந்த இவரின் நடத்தையை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் 2024 செப்டம்பரில் பீகார் மாநிலம், சிக்கந்தரா பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்த போலி துப்பாக்கி, சீருடை மற்றும் 2 லட்சம் மதிப்புள்ள காசோலை ஆகிய பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் மனோஜ் சிங் என்பவர் 2 லட்சம் பெற்றுக் கொண்டு போலி அதிகாரி வேடத்தை கொடுத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும், ரீல்ஸ்களிலும் பிரபலமாக வலம் வந்த மிதிலேஷ் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகி இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் உருளைக்கிழங்கை உரிப்பது போன்ற காட்சிகள் வெளியான நிலையில் நெட்டிசன்களை சிந்திக்க வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் மூலம் பொய்யான புகழ் எவ்வளவு வேகமாக வீழ்ச்சி தரும் என்பதையும், உண்மையான அடையாளத்தை கொள்வது வாழ்க்கைக்கு முக்கியம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது