ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த ஒரு வாகன மோதல் விவகாரம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎஸ்டி மேம்பாலம் அருகே நடந்த இந்த சம்பவத்தில், ஒரு கார் ஓட்டுநர், தனது காரை ஒருவரின் பைக்கில் திட்டமிட்டு மோதியதால், இருவருக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்தது. இந்த நிகழ்வு அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.
Road-Rage Kalesh b/w Brezza Car Driver and Bike guy over Car hits the bike, Haryana
pic.twitter.com/i3w9b2HDvv— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 15, 2025
வீடியோவில், முதலில் காரில் வந்த இளைஞர், கோபத்தில் ஒரு பைக் ஓட்டுநரை நேராக மோதுகிறார். அதற்குப் பிறகு, பைக் ஓட்டுநர் காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். சண்டை தீவிரமாகி, பைக் ஓட்டுநர் கார் ஓட்டுநரை தாக்குகிறார், மேலும் கோபத்தில் காரை உதைத்தும் காணப்படுகிறார். பின்னர், கார் ஓட்டுநர் மீண்டும் காரில் சென்று அமர, பைக்கை எடுக்க முயற்சிக்கும் பைக் ஓட்டுநரை பார்த்து, தன்னுடைய காரை மீண்டும் பைக்கின் மீது மோதுகிறார். இது மூன்று முதல் நான்கு முறை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை கானூர் காவல் நிலையத்தில் எந்தவிதமான புகாரும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இந்த வழக்கில் இருவரும் அடையாளம் காணப்படாத நிலையில் போலீசார் சிசிடிவி வீடியோக்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இருக்கும்போதும், யாரும் இதில் தலையிடாமல் பார்வையாளர்களாகவே இருந்தது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், சாலையில் ஏற்படும் வன்முறைகள் மீதான கட்டுப்பாடு தேவை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
