விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் அதிமுகவின் பொது செயலாளர் இபிஎஸ் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரண்டாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக திருமாவளவனுடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்ததாக விசிக கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

30ஆம் தேதி வரை மருத்துவமனை ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் திருமாவளவனுக்கு அறிவுறுத்தல் செய்திருக்கிறார்கள். எனவே உடல்நலம் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக நேற்று இரவு பேசி நலம் விசாரித்து இருப்பதாக விசிக கட்சியினுடைய நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.அதிமுக – பாஜகவினுடைய கூட்டணி முறிவு ஏற்பட்டிருந்தாலும் இது உடல் நலம் குறித்து மட்டுமே விசாரிப்பதாக விசிக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.