இமயமலையில் புதிய பாம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு இனத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னா டி காப்ரியாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கோவிட் சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அறிய பாம்பை இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்  இதனைத் தொடர்ந்து இது பேசு பொருளாக ஆன நிலையில் இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் 2 புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்து உள்ளதாகவும் நேபால் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா வரை பரவி உள்ளதாகவும் கண்டறியப்பட்ட பாம்பு இனத்திற்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற  காப்பரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கௌரவிக்கும் விதமாக பாம்பு இனத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் அவரது பெயரை சூட்டியுள்ளனர். இதை தவிர்த்து சிக்கிம் போடா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றிலுள்ள இமயமலை பகுதியில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்திற்கு ஆங்குய்குலஸ் ராபி என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த 2 வகை பாம்புகளும் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் காணப்படுவதாகவும், அதில் ஆங்குய்குலஸ் ராபி மிகவும் அரிதாக தென்பட கூடியதாகவும் தெரிவித்துள்ளனர்.