உத்திரபிரதேசத்தில் அதுல் சுபாஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பம் செய்த துன்புறுத்தல் காரணமாக 24 பக்க அளவுக்கு கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் அவர் தனக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு தங்களது திருமணம் சரியாக நடக்கவில்லை என்றும், அவரது மனைவி, மனைவியின் அண்ணன், அம்மா, மாமா ஆகியோரையும் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் தன்னை மிரட்டி பணம் பறிக்க அப்பாவியான 4 வயது குழந்தையை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், ஆனால் அந்த தீர்ப்பு இதற்கு சாதகமாக தீர்ப்பளிக்க என்றும் கூறியுள்ளார். அதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சுபாஷின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் மாதம் 2 லட்சம் பராமரிப்புத் தொகையாக வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நீதி கிடைக்க வேண்டும் என்ற பலகையையும் தனது வீட்டில் மாட்டி வைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் சுபாஷின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.