
புதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ஜூன் 15 முதல் 17, 2025 வரை புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி அதாவது நாளை, ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை மதியம் 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.