அமெரிக்க நாட்டில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட எட்டு நபர்கள் பலியாகி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் உதா மாகாணத்தில் அமைந்திருக்கும் சால்ட் லேக் சிட்டியில் ஒரு குடியிருப்பில்காவல்துறையினர் பரிசோதனை மேற்கொள்ள சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த குடியிருப்பில் குழந்தைகள் ஐந்து பேர் உட்பட எட்டு நபர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகி இறந்து கிடந்தனர்.

இது, காவல்துறை துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவில்லை. எனினும், இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அந்த நகரின் தெற்கு பகுதியில் 8000 மக்கள் வாழும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.