சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை முன்பாக போராட்டம் நடத்தப்படும் என சிஐடியூ அறிவித்துள்ளது.