ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்போது மே மற்றும் ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான online.tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மே மற்றும் ஜூன் மாதத்தில் திருமலையில் உள்ளது விடுதிகளில் தங்குவதற்கு முன்பதிவு செய்யும் வசதியானது நாளை (ஏப்ரல் 26) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.