ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் 300 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இதில் ஒருசிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் இதற்கிடையில் அதனுடன் ரயில் பயணத்தின் போது காப்பீடு என்பதும் விவாதமாகி விட்டது.

ஐஆர்சிடிசி போர்ட்டலில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இனி தானாகவே ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும். சுவாரஸ்யமாக, தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையான ரூ. 10 லட்சத்திற்கு வசூலிக்கப்படும் பிரீமியமானது ரூ.0.35 பைசா மட்டுமே. இந்த பாலிசி பயணத்தின் போது ரயில் விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு/இயலாமை/மருத்துவ செலவுகளை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.