இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனியாக நேரத்தை செலவிடுவதற்காக தனது கிராமத்தில் இரவில் மின்சாரத்தை துண்டித்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெத்தியா மாவட்டம் நௌதன் காவல் நிலைய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் இரவு மின்விநியோகத்தை நிறுத்த மின்மாற்றி இருக்கும் இடத்திற்கு செல்வது வழக்கம்.

இதனால கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. இது தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்து வந்துள்ளதால் சந்தேகமடைந்த அக்கிராம மக்கள், அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது இளம்பெண்ணின் காதல் வெளிச்சத்திற்கு வந்தது.