வங்கி கணக்கு திறக்க நினைப்பவர்களுக்குதற்போது  அருமையான வசதி வந்துள்ளது. அதாவது இனி வங்கி கணக்கு திறப்பதற்கு நீண்ட செயல்முறை தேவை கிடையாது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதார் ஒடிபி அடிப்படையில் வங்கி கணக்கு திறக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.   இனி வாடிக்கையாளர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக எளிதாக சேமிப்பு கணக்கை திறக்க முடியும்.

இனி வாடிக்கையாளர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் KYC  செயல்முறையை முடிக்கலாம். இதன் மூலம் நாம் ளிதாக சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும். இந்த டிஜிட்டல் செயல்முறையானது ரிசர்வ் வங்கியின் ‘ஆதார்’ ஒடிபி அடிப்படையிலான e-KYC வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. இந்த டிஜிட்டல் செயல்முறையானது பாதுகாப்பான மற்றும் தொந்தரவே இல்லாத அனுபவம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்தியன் ஓவர்சீஸ்  வங்கி வாடிக்கையாளர்கள் இனி  குறைந்தபட்ச ஆவணங்களோடு கணக்கு திறப்பது மூலமாக உடனடி வங்கி சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இதனால் இனி வங்கிக்கு செல்ல தேவை இல்லை. மொபைல் ஆப் அல்லது கணினியில் இருந்து ஆதார் ஒடிபி மூலம் வங்கி கணக்கு திறந்து உடனடி வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.