அமெரிக்காவில் குடியரசுக் கட்சி அரசியல்வாதி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் விவேக் ராமசாமி, தனது மனைவி அபூர்வாவுடன் 10வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது இதயப்பூர்வமான பதிவு, H-1B விசா திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளின் மத்தியில், இனவெறி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கருத்துக்களால் எதிர்கொள்ளப்பட்டது.

 

விவேக், 2011ஆம் ஆண்டு தனது மனைவியை முதன்முறையாக சந்தித்த கதையை பகிர்ந்துள்ளார். அவர்கள் ராக்கீஸ் மலைக்குப் பயணித்த அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார். “14 ஆண்டுகள் மற்றும் இரண்டு குழந்தைகள் கழித்து, இந்த வார இறுதியில் எங்கள் 10 ஆண்டு திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட நாங்கள் இறுதியாக திரும்பி வந்தோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார் .

இப்பதிவுக்கு பின்னர், பல சமூக ஊடக பயனர்கள், “இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” போன்ற இனவெறி கருத்துக்களைப் பதிவு செய்தனர். மேலும், சிலர் அவர்களின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்பினர். விவேக், H-1B விசா திட்டத்தை விமர்சித்திருந்தாலும், அவரது இந்திய அடையாளத்தின் காரணமாக, அந்த அமைப்பை ஆதரிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம், அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் இனவெறி தொடர்பான விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.